- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
பாவ சஞ்சலத்தை நீக்க பிராண சிநேகிதர் உண்டே
பாவ பாரம் தீர்ந்துபோக மிட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சமே நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும், ஊக்கமான ஜெபத்தால்
கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் ஏற்பட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச் சோர்வை தீயகுணம் மாற்றுவார்
பெலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கி கெஞ்சுவோம்